திருத்தந்தை பிரான்சிஸ் : பணம், புகழ், பதவி ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டு வாழ்பவர்கள்
உண்மையிலேயே மகிழ்வுடன் இருப்பது இயலாது
ஜூலை,24,2014. "பணம், புகழ், பதவி ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டு வாழ்பவர்கள் உண்மையிலேயே
மகிழ்வுடன் இருப்பது இயலாது" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் Twitter
செய்தியாக இவ்வியாழன் காலை வெளியிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவின் சிகாகோ நகரில்
அமைத்துள்ள திருத்தூதர் புனித தோமா சீரோ மலபார் மறைமாவட்டத்திற்கு, அருள் பணியாளர் Joy
Alappat அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துணை ஆயராக இவ்வியாழனன்று நியமனம்
செய்துள்ளார். 1956ம் ஆண்டு கேரளாவில் பிறந்த Joy Alappat அவர்கள், 1981ம் ஆண்டு அருள்
பணியாளராக திருநிலை பெற்றபின், இந்தியாவிலும், அமெரிக்காவிலும் தன் மேல்படிப்பை நிறைவு
செய்தார். சில ஆண்டுகள் கேரளாவில் அருள் பணியாற்றியபின், Joy Alappat அவர்கள், 1993ம்
ஆண்டு முதல் அமெரிக்காவில் Georgetown பல்கலைக் கழகத்திலும் வேறு இடங்களிலும் அருள் பணியாற்றி
வந்துள்ளார்.