இந்தியச் சிறைச்சாலைகளின் அடிப்படை வசதிகளற்ற நிலைக்கு எதிர்ப்பு, கத்தோலிக்க சிறைக்கைதிகள்
பணிக்குழு
ஜூலை,24,2014. இந்தியாவில் உள்ள சிறைச் சாலைகளில் அடிப்படை வசதிகள் இன்றி அதிக அளவில்
கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, இந்திய சிறைக் கைதிகள் பணிக்குழு குரல்
எழுப்பியுள்ளது. 28 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் கேரளாவில் சிறைக் கைதிகள் மத்தியில்
பணியைத் துவக்கிய கத்தோலிக்கப் பணிக்குழு தற்போது, இந்திய ஆயர் பேரவையின் நீதி அமைதி,
முன்னேற்றப் பணிக்குழுவின் ஓர் அங்கமாகச் செயலாற்றி வருகிறது. நாத்சி வதை முகாமில்
கொல்லப்பட்ட புனித மாக்சிமில்லியன் கோல்பே, இந்திய சிறைக் கைதிகள் பணிக்குழுவின் காவலராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2012ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் உள்ள
சிறைகளில் 3,40,000 கைதிகள் தங்கும் வசதிகள் உள்ள நிலையில், அவ்வாண்டு, 3,85,000 கைதிகள்
இருந்தனர் என்றும், ஒரு சில சிறைகளில் கட்டுப்பாடு ஏதுமின்றி கைதிகள் பெருமளவில் அடைத்து
வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இப்பணிக்குழு அரசிடம் முறையிட்டுள்ளது. இந்திய சிறைக்
கைதிகள் பணிக்குழு தற்போது, இந்தியாவில் 850 இடங்களில் பணியாற்றுகின்றனர் என்றும், இப்பணிக்
குழுவில் 6000 சுயவிருப்பப் பணியாளர்கள் இணைந்துள்ளனர் என்றும் Fides செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது.