ஸ்காட்லாந்து நாட்டின் Glasgowநகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டுக்கள்
துவக்கம்
ஜூலை,23,2014. ஜூலை 23, இப்புதனன்று, ஸ்காட்லாந்து நாட்டின் Glasgow நகரில் 20வது காமன்வெல்த்
விளையாட்டுக்கள் துவங்குகிறது. ஆகஸ்ட் மாதம் 3ம் தேதிமுடிய நீடிக்கும் இந்த விளையாட்டுப்
போட்டிகளில், 71 நாடுகளிலிருந்து 4500க்கும் அதிகமான வீர்கள் பங்கேற்கின்றனர். 2010ம்
ஆண்டு, 19வது காமன்வெல்த் விளையாட்டுக்கள், புது டில்லியில் நடத்தப்பட்டபோது எழுந்த பல்வேறு
பிரச்சனைகள், இம்முறை இடம்பெறாது என்று இந்த விளையாட்டுக்களை ஏற்பாடு செய்துள்ளவர்கள்
கூறியுள்ளனர். 1930ம் ஆண்டு கனடா நாட்டின் Hamilton என்ற நகரில் முதல் காமன்வெல்த்
விளையாட்டுக்கள் நடைபெற்றபோது, 11 நாடுகளிலிருந்து வந்திருந்த 400 வீரர்கள் பங்கேற்றனர். நான்கு
ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டுக்கள், இதுவரை, ஐந்து முறை ஆஸ்திரேலியாவிலும்,
நான்கு முறை கனடா நாட்டிலும், தற்போது Glasgow நகரில் துவங்கும் விளையாட்டு உட்பட, மும்முறை
ஸ்காட்லாந்து நாட்டிலும் நடைபெற்றுள்ளன.