மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதி உருவாக செபிக்கும்படி அயர்லாந்து ஆயர்கள் அழைப்பு
ஜூலை,23,2014. மத்தியக் கிழக்குப் பகுதியில் வெடித்துள்ள வன்முறைகள் நாம் இதுவரை கண்டிராத
அளவு வளர்ந்துள்ளது, நமது மனதை அதிர்ச்சி அடையச் செய்கிறது என்று அயர்லாந்து ஆயர்கள்
பேரவை கூறியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தால் காசா பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்களைக்
குறித்தும், சிரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் வன்முறைகளைக் குறித்தும்
அயர்லாந்து ஆயர்கள் பேரவையின் நீதி அமைதிப் பணிக்குழு செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. தீமையால்
நாம் தோல்வியடையாமல் இருக்க செபம் நமக்கு உதவுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
கூறியுள்ள வார்த்தைகளை தங்கள் செய்தியில் வெளியிட்டுள்ள ஆயர் John McAreavey அவர்கள்,
அனைத்து நன்மனம் கொண்டோரும் இணைந்து காசா, சிரியா பகுதிகளில் அமைதி ஏற்பட, ஜூலை 27, வருகிற
ஞாயிறு செபிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அயர்லாந்து ஆயர் பேரவையின் இச்செய்தி,
அயர்லாந்தில் உள்ள அனைத்து கத்தோலிக்கப் பங்கு கோவில்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.