ஈராக்கில் கடத்தி வைக்கப்பட்டிருந்த இரு அருள்சகோதரிகளும், மூன்று சிறுமிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது
மகிழ்ச்சிதருகின்றது, முதுபெரும் தந்தை சாக்கோ.
ஜூலை,15,2014. ஈராக் நாட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த இரு அருள்சகோதரிகளும், மூன்று
சிறுமிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சிதரும் செய்தி என்று கூறியுள்ளார்
கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ. மோசூல் பகுதியில் அமல
அன்னை புதல்வியர் சபையால் நடத்தப்பட்ட சிறுமிகள் காப்பகத்திலிருந்து அருள்சகோதரிகள் Atur,
Miskinta ஆகிய இருவரும், மூன்று சிறுமிகளும் கடந்த மாதம் 28ம் தேதி கடத்திச் செல்லப்பட்டிருந்த
நிலையில், அந்நகர் மக்களின் முயற்சியால் அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது
விடுவிக்கப்பட்டுள்ள இந்த ஐவரும் எவ்வகையிலும் துன்புறுத்தப்படவில்லை என அவர்கள் மூலம்
தெரிய வந்ததாக முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் கூறினார்.