ஜூலை,11,2014. இந்தியாவின் பரேய்லி மறைமாவட்ட ஆயர் அந்தோணி ஃபெர்னான்டஸ் அவர்களின் பணி
ஓய்வை ஏற்று, அருள்திரு இக்னேஷியஸ் டி சூசா அவர்களை அம்மறைமாவட்டத்துக்கு, புதிய ஆயராக
இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். புதிய ஆயர் இக்னேஷியஸ் டி
சூசா அவர்கள், அம்மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாகவும், பேராலயப் பங்குத் தந்தையாகவும்
தற்போது பணியாற்றி வருகிறார். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூரு மறைமாவட்டத்தில்
1964ம் ஆண்டில் பிறந்த புதிய ஆயர் இக்னேஷியஸ் டி சூசா அவர்கள், உரோம் உர்பானியானம் பாப்பிறை
பல்கலைக்கழகத்தில் விவிலிய இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆக்ரா உயர்மறைமாவட்டத்திலிருந்து
1989ம் ஆண்டில் பிரிக்கப்பட்டு தனி மறைமாவட்டமாக உருவாக்கப்பட்ட பரேய்லியிலுள்ள 1 கோடிக்கு
மேற்பட்ட மக்களில் 6,744 பேர் கத்தோலிக்கர். இம்மறைமாவட்டத்திலுள்ள 55 பங்குகளில் 83
அருள்பணியாளர்களும், 42 அருள்சகோதரர்களும், 289 அருள்சகோதரிகளும் பணிபுரிகின்றனர்