2014-07-08 16:06:02

லெபனன் நாடாளுமன்றம் புதிய அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும்வரை தினமும் கூடவேண்டும், முதுபெரும் தந்தை Rahi


ஜூலை,08,2014. லெபனன் நாடாளுமன்றம் புதிய அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும்வரை அது தினமும் கூடவேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார் அந்நாட்டு மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Beshara al-Rahi.
Dimane ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றியபோது நாடாளுமன்ற சபாநாயகர் Nabih Berry அவர்களை இவ்வாறு கேட்டுக்கொண்ட முதுபெரும் தந்தை Rahi அவர்கள், நாட்டின் அரசியல் அமைப்பின்படி நாடாளுமன்றம் தினமும் கூட வேண்டும் எனக் கூறினார்.
லெபனன் நாடாளுமன்றம் புதிய அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தடையாய் இருப்பவர் எவரும் நாட்டுக்கு கேடு விளைவிக்கின்றார் என்றும் எச்சரித்துள்ளார் முதுபெரும் தந்தை Rahi.
லெபனன் நாடாளுமன்றம் புதிய அரசுத்தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்குமாறு அந்நாட்டை நட்பு நாடுகள் வலியுறுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் முதுபெரும் தந்தை Rahi.
கடந்த மே மாதம் முதல் லெபனன் நாடு அரசுத்தலைவரின்றி உள்ளது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.