இந்திய காரித்தாஸ் சிறார் பாதுகாப்புக் கொள்கையை அமல்படுத்துவது குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தி வருகிறது
ஜூலை,05,2014. இந்தியாவில் சிறார் பாதுகாப்புக் கொள்கையை அமல்படுத்தவேண்டியதன் விழிப்புணர்வை
300க்கும் மேற்பட்ட தனது கிளை அமைப்புகள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றது இந்திய காரித்தாஸ்
நிறுவனம். இந்திய ஆயர்களின் சமூகநல அமைப்பான காரித்தாஸ் நிறுவனம் நாடெங்கும் தொடர்
பயிற்சிப் பாசறைகளை நடத்தி, 2010ம் ஆண்டில் நாட்டில் கொண்டுவரப்பட்ட சிறார் பாதுகாப்புக்
கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறது. கொல்க்த்தா, ராஞ்சி,
சட்டீஸ்கார், நயினிடால் போன்ற பகுதிகளில் ஏற்கனவே இந்தப் பயிற்சிப் பாசறைகளை நடத்தியுள்ளது
இந்திய காரித்தாஸ்.