2014-07-03 17:08:00

கர்தினால் Veglio, வருகிற ஞாயிறன்று, Lampedusa தீவுக்குச் சென்று திருப்பலியாற்றுவார்


ஜூலை,02,2014. நாடுவிட்டு நாடு செல்வோர், மற்றும் பயணிப்போர் பணியில் ஈடுபட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Antonio Maria Veglio அவர்கள், ஜூலை 6, வருகிற ஞாயிறன்று, இத்தாலியின் தென் முனையில் அமைந்துள்ள Lampedusa தீவுக்குச் சென்று திருப்பலியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Lampedusa தீவுக்கு மேற்கொண்ட முதல் பயணத்தின் முதலாம் ஆண்டு நிறைவாக கர்தினால் Veglio அவர்களின் பயணம் அமையும் என்று கூறப்படுகிறது.
ஜூலை 6ம் தேதி, கர்தினால் Veglio அவர்கள் Lampedusa தீவில் நிறைவேற்றும் திருப்பலியை, இத்தாலியின் Rai தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பு செய்யும்.
ஆப்ரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள் ஆகிய பகுதிகளிலிருந்து ஐரோப்பாவை அடைவதற்கு ஒரு வாயிலாக அமைந்துள்ள Lampedusa தீவை நோக்கி வந்துள்ள பல புலம்பெயர்ந்தோர், கடினமான, ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு, கடலில் உயிரிழந்துள்ளனர் என்பதால், அவர்களை நினைவுகூர்ந்து திருத்தந்தை கடந்த ஆண்டு அங்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.