ஐ.நா. அவை கூட்டங்களில் கலந்துகொள்ளும் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பணிமாற்றம்
ஜூலை,02,2014 நியூயார்க் நகரில் இயங்கி வரும் ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின்
சார்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றுவதற்கு, பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த பேராயர்
Bernardito Auza அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார். பிலிப்பின்ஸ்
நாட்டில் 1959ம் ஆண்டு பிறந்த Bernardito Auza அவர்கள், தற்போது ஹைட்டி நாட்டின் திருப்பீடத்
தூதராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக, இப்பணியை ஆற்றிய பேராயர் பிரான்சிஸ்
சுள்ளிக்காட் அவர்கள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால், 2010ம் ஆண்டு,
செப்டம்பர் மாதம் இப்பணிக்கு நியமிக்கப்பட்டார்.