பணப்பரிமாற்றம் குறித்து கண்காணிக்கும் அமெரிக்க அமைப்புடன் வத்திக்கான் ஒப்பந்தம்
ஜீலை,01,2014. நாட்டிற்குள் பணப்பரிமாற்றம் குறித்து கண்காணிக்கும் அமெரிக்க அமைப்புடன்
ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது வத்திக்கான் நிதி கண்காணிப்புக்குழு. தங்களுக்குள்
தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இரு அரசுகளுக்கும் உதவும் இந்த ஒப்பந்தம், அனைத்துலக ஒத்துழைப்பை
பலப்படுத்துவதன் ஒரு பகுதியாக நோக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி விவகாரங்களில்
வத்திக்கானின் வெளிப்படையான தன்மையையும், அனைத்து நாடுகளுடன் ஆன ஒத்துழைப்பையும் வெளிப்படுத்துவதாக
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது உள்ளது என்றார் வத்திக்கான நிதி கண்காணிப்பு அமைப்பின்
தலைவர் Rene Bruelhart.