ஜூன்,30,2014. 'கடவுளைத் தந்தையாகவும், அருகாமையில் வாழ்வோரை எம்மைப் போன்றும் அன்புகூர
இயேசுவே எமக்கு உதவியருளும்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட புனிதர்கள் பேதுரு
மற்றும் பவுல் திருவிழாவையொட்டியும் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், ' உரோம் நகரையும், உலகில் திருப்பயணியாக உள்ள முழு திருஅவையையும்
புனித பேதுரு மற்றும் பவுல் ஆசீர்வதிப்பார்களாக' என அதில் குறிப்பிட்டுள்ளார்.