பான் கி மூன்: உலகில் சித்ரவதைகள் நிறுத்தப்படுவதற்கு முயற்சிப்போம்
ஜூன்,26,2014. ஜூன் 26, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட, சித்ரவதைக்குப் பலியானோர்க்கு
ஆதரவு தெரிவிக்கும் உலக நாளையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், உலகில் சித்ரவதைகள்
நிறுத்தப்படுவதற்கு நமது முயற்சிகளை வலுப்படுத்துவோம் என கேட்டுக்கொண்டுள்ளார். உலகின்
எல்லாப் பாகங்களிலும், பெண்கள், ஆண்கள் மற்றும் சிறார்மீது, உடலளவிலும் மனத்தளவிலும்
திட்டமிட்டு சித்ரவதைகள் நடத்தப்படுகின்றன, அவர்கள் தவறாகவும் நடத்தப்படுகின்றனர் எனக்
கூறும் பான் கி மூன் அவர்கள், இவற்றைச் செய்யத் தூண்டும் அரசு அதிகாரிகள் சட்டத்தை அமல்படுத்தி,
மனித உரிமைகளையும் மக்களையும் பாதுகாக்க வேண்டியவர்கள் என்றும் கூறினார். சித்ரவதைக்கு
எதிரான உலக ஒப்பந்தத்தில் 155 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.