போரிடுவதை நிறுத்தி பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள், தென் சூடான் பல்சமயத் தலைவர்கள்
வேண்டுகோள்
ஜூன்,25,2014. போரிடுவதை நிறுத்தி பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என்ற அவசர வேண்டுகோளை
விடுத்துள்ளனர் தென் சூடான் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலைவர்கள். கடந்த டிசம்பரில்
தென் சூடானில் தொடங்கிய உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம் இம்மாதம்
11ம் தேதி அடிஸ் அபாபாவில் கையெழுத்திடப்பட்டதை முன்னிட்டு அவ்வொப்பந்தம் அமல்படுத்தப்படுத்தப்பட
வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக, தென் சூடான் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலைவர்கள்
இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதைத் தாமதப்படுத்துவது,
மேலும் உள்நாட்டுப்போருக்கும் இரத்தம் சிந்தலுக்கும் தயார் செய்வதுபோல் தெரிகின்றது எனவும்
அவ்வறிக்கை எச்சரிக்கின்றது. தென் சூடான் அரசுத்தலைவர் Salva Kiir அவர்களுக்கும்,
அந்நாட்டின் முன்னாள் உதவி அரசுத்தலைவர் Riek Machar அவர்களுக்கு ஆதரவான புரட்சியாளர்களுக்கும்
இடையே கடந்த டிசம்பரில் மோதல்கள் தொடங்கின.