2014-06-24 15:51:42

ஒவ்வொருவரும் தரமான வேலையைக் கொண்டிருப்பது மனித மாண்புக்கு இன்றியமையாதது, திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,24,2014. ஒவ்வொருவரும் ஒரு தரமான வேலையைக் கொண்டிருப்பதற்கு எவ்வளவு ஆவல்கொள்கிறேன்! அது மனித மாண்புக்கு இன்றியமையாதது என, தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் பிரதிநிதிகள் குழு ஒன்று இந்தோனேசியாவில் ஆறு நாள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
ஜூன் 22, இஞ்ஞாயிறன்று தொடங்கிய இச்சுற்றுப்பயணத்தில் இந்தோனேசியாவின் முக்கிய இஸ்லாமிய அமைப்புகள், அந்நாட்டு ஆயர் பேரவை ஆகியவற்றின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து வருகின்றது இக்குழு.
உலகில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்தோனேசியாவில் திருப்பீடப் பிரதிநிதிகள் மேற்கொண்டுள்ள இச்சுற்றுப்பயணம் பல்சமய உரையாடலை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.