2014-06-23 15:46:36

திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரைத் தீர்ப்பிடுகிறவர்கள் வெளிவேடக்காரர்கள்


ஜூன்,23,2014. தனது சகோதரரை குற்றவாளி எனத் தீர்ப்பிடுகிறவர் தானும் அதேபோல் தீர்ப்பிடப்படுவார்; இறைவன் ஒருவரே ஒரே நீதிபதி; மாறாக, தீர்ப்பிடப்படுகிறவர் அவரின் முதல் நீதிபதியான இயேசு மற்றும் தூய ஆவியின் பாதுகாப்பில் எப்போதும் தன்னை வைக்கலாம் என இத்திங்கள் காலை திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில், பிறர் உடமையை அநியாயமாய்ப் பறித்துக் கொள்பவர் இறுதியில் அவரே இழப்பவராக இருப்பார், ஏனெனில் அவரிடம் குறைபடும் கருணைக்கு அவரே பலியாகிவிடுவார் என்றும் எச்சரித்தார் திருத்தந்தை.
தீர்ப்பிடுகிறவர் தவறு செய்கிறார், குழம்பிப்போய் இருக்கிறார் மற்றும் தோல்வியடைந்தவராக மாறுகிறார், ஏனெனில் ஒரே நீதிபதியாக இருக்கும் இறைவனின் இடத்தை அவர் எடுத்துக் கொள்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு வானகத்தந்தையின் முன்னால் ஒருபோதும் நம்மை குறைகூற மாட்டார், மாறாக, நமக்காக பரிந்துபேசுவார், அவரே நமக்காக முதலில் பரிந்து பேசுபவர் என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நாம் இயேசுவின் பாதையில் நடக்க விரும்பினால் ஒருபோதும் தீர்ப்பிடாதவர்களாய் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.