அருள்பணியாளர்க்கான 24 மணி நேர செபமாலை பக்தி முயற்சிக்கு திருத்தந்தை ஆசீர்
ஜூன்,21,2014. அருள்பணியாளர்க்கான 24 மணி நேர செபமாலை பக்தி முயற்சி என்ற அமைப்பினரின்
5வது அனைத்துலக மாநாட்டுக்குத் தனது நல்வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசுவின்
திருஇதய வாழாவும், உலக அருள்பணியாளர் நாளுமாகிய இம்மாதம் 27ம் தேதி இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. நியுயார்க்
மற்றும் டப்ளின் நகர்களை மையமாகக் கொண்டு இயங்கும் அந்த அமைப்புக்கு ஆயர் ஆலோசகராக இருக்கும்
பேராயர் Michael Neary அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால்
பியெத்ரோ பரோலின் அவர்கள் இச்செய்தியை அனுப்பியுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்
இருபது நாடுகளில் தொடங்கப்பட்ட இந்தப் பக்தி முயற்சி தற்சமயம் 46 நாடுகளில் 85 திருத்தலங்களில்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.