இஸ்பானிய நாட்டில், திருப்பலிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை 23 விழுக்காடு கூடியுள்ளது
ஜூன்,16,2014. 2012 மற்றும் 2013 ஆகிய இரு ஆண்டுகளில் இஸ்பானிய நாட்டில் திருப்பலிக்குச்
செல்லும் மக்களின் எண்ணிக்கை 23 விழுக்காடு கூடியுள்ளது என்று அந்நாட்டின் கணிப்பு ஒன்று
தெரிவிக்கிறது. CIS எனப்படும் சமுதாயப் பகுப்பாய்வு மையம் அண்மையில் வெளியிட்ட ஓர்
அறிக்கையில், 2011-12 ஆகிய ஆண்டுகளில், 15 விழுக்காடு கூடியிருந்த இவ்வெண்ணிக்கை, கடந்த
ஓராண்டில் 23 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. திருப்பலிக்குச்
செல்வோரின் எண்ணிக்கை மட்டுமல்ல, துறவற வாழ்வுக்கும், அருள் பணியாளர் வாழ்வுக்கும் தங்களை
அர்ப்பணிக்கும் இளம் ஆண், பெண் ஆகியோரின் எண்ணிக்கையும் கடந்த 3 ஆண்டுகள் அதிகரித்து
வந்துள்ளது என்று CIS அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. விளம்பர உலகின் முன்னணி நடிகராக
இருந்த Olalla Oliveros என்ற இளம்பெண், இவ்வாண்டு மேமாதம் புனித மைக்கிள் துறவுச் சபையில்
அருள் சகோதரியாக இணைந்தது, ஊடக உலகில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.