2014-06-14 16:04:53

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிறந்து வளர்ந்த வீடு “வரலாற்றுத் தளமாக” அறிவிப்பு


ஜூன்,14,2014. அர்ஜென்டீனா நாட்டின் புவனோஸ் ஐரெஸ் மாநகரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிறந்து வளர்ந்த வீட்டை, “வரலாற்றுத் தளமாக” அறிவித்துள்ளது புவனோஸ் ஐரெஸ் மாநகராட்சி.
இந்நிகழ்வில் ஓட்டளித்த புவனோஸ் ஐரெஸ் மாநகராட்சி உறுப்பினர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகள்மீது மீது பரிவன்பு மிக்கவராக, இன்றைய சமூகத்தின் பிரச்சனைகள் குறித்து அக்கறை கொண்டவராக, ஒரு தாழ்மையான திருத்தந்தையாக இருக்கிறார் என்று கூறியுள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து புவனோஸ் ஐரெஸ் மாநகரிலுள்ள அவரது வீடு சுற்றுலாப் பயணிகளும், கத்தோலிக்கரும் விரும்பிச் செல்லும் இடமாக மாறி வருகின்றது என்று ஊடகங்கள் கூறுகின்றன.
அர்ஜென்டீனா நாட்டின் சட்டப்படி, வரலாற்றுத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ மாற்றம் செய்யப்படவோ அல்லது இடிக்கப்படவோ கூடாது. இப்படிச் செய்வதற்கு அந்நாட்டின் கலாச்சார அமைச்சகத்தின் முன்அனுமதி தேவை.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.