2014-06-13 15:49:32

டுவிட்டரில் திருத்தந்தை : தூய ஆவி நம் வாழ்வில் செயல்படுவதற்கு அனுமதிப்போம்


ஜூன்,13,2014. தூய ஆவி நம் வாழ்வில் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அவரை நம் வாழ்வில் அனுமதிப்போம்; இதனால் அவர் நம்மையும், திருஅவையையும், உலகையும் புதுப்பிப்பார் என, தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளியன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், ஜூன் 19, வருகிற வியாழனன்று வத்திக்கானில் சிறப்பிக்கப்படும் ஆண்டவரின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழாவன்று உரோம் நகரில் திருநற்கருணைப் பவனியை தலைமையேற்று நடத்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித ஜான் லாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் வியாழன் மாலை, பெருவிழாத் திருப்பலியை நிகழ்த்திய பின்னர், அங்கிருந்து மேரி மேஜர் பசிலிக்கா வரை இடம்பெறும் திருநற்கருணைப் பவனியை தலைமையேற்று நடத்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தும் இத்திருப்பலியில் கலந்துகொள்வதற்கு அனுமதிச் சீட்டுகள் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பவனியானது பாரம்பரியமாக இடம்பெற்று வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.