ஜூன்,12,2014. இம்மாதம் 4ம் தேதி சென்னையில் தமிழகக் கைம்பெண்கள் வாழ்வுரிமை மாநாடு
ஒன்று நடந்தது. ஆயிரத்துக்கு அதிகமான கைம்பெண்கள் சென்னை இலொயோலாக் கல்லூரியிலிருந்து
பேரணி ஒன்றைத் தொடங்கி நடத்தினர். தமிழகத்தில் நடந்த இத்தகைய முதல் மாநாடு குறித்துப்
பேசுகிறார் அ.பணி பால் மைக்கிள் ராஜ், இயேசு சபை. நாகப்பட்டினத்தை மையமாக வைத்து இயேசு
சபையினர் நடத்தும் கைம்பெண்கள் வாழ்வுரிமை இயக்கப் பொறுப்பாளர் இவர்.