அருள் பணியாளர் பிரேம் குமார் அவர்களை விடுவிப்பதற்கு இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும்
மேற்கொண்டு வருகிறது - இந்தியப் பிரதமர்
ஜூன்,12,2014. அருள் பணியாளர் அலெக்சிஸ் பிரேம் குமார் அவர்களை விடுவிப்பதற்கு இந்திய
அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
அவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அருள் பணியாளருக்கு
எவ்வித ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதே தங்கள் தலையாய நோக்கம் என்றும், இந்திய அரசின்
உயர் அதிகாரிகள், காபூல் நகரில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் எந்நேரமும் தொடர்பில் உள்ளனர்
என்றும் பிரதமரின் கடிதம் கூறியுள்ளது. ஜூன் 2ம் தேதி கடத்தப்பட்ட 47 வயதான இயேசு
சபை அருள் பணியாளர் பிரேம் குமாரைக் கடத்திச் சென்றவர்கள் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை
என்றும், இந்தக் கடத்தல் தொடர்பாக மூன்று தலிபான்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
என்றும் NDTV என்ற இந்திய ஊடகச் செய்தியொன்று கூறுகிறது.