2014-06-11 16:13:11

குழந்தைத் தொழிலாளர் முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட திருத்தந்தை அழைப்பு


ஜூன்,11,2014. ஜூன்,12 இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்படும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் பற்றி இப்பொது மறைபோதகத்துக்குப் பின்னர் குறிப்பிட்டு, குழந்தைத் தொழிலாளர் முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். RealAudioMP3
இலட்சக்கணக்கான சிறார் தரக்குறைவான நிலைகளில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர், அடிமைத்தனம் மற்றும் சுரண்டலுக்கும், பல்வேறு கொடுமைகளுக்கும் பாகுபாடுகளுக்கும், உரிமை மீறல்களுக்கும் உட்படுகின்றனர். இந்தச் சீர்கேடுகளை முறியடிப்பதற்கு அனைத்துலக சமுதாயம் இச்சிறாருக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்க முடியும். ஒவ்வொரு சிறுவன், சிறுமியின் மாண்பு பாதுகாக்கப்பட்டு அவர்கள் நலமாக வளர்வதற்கு நாம் அனைவரும், குறிப்பாக, குடும்பங்கள் நமது அர்ப்பணத்தைப் புதுப்பிப்போம். ஒரு மென்மையான குழந்தைப்பருவம் சிறாருக்குத் தங்களின் வாழ்வையும் எதிர்காலத்தையும் நம்பிக்கையுடன் நோக்குவதற்கு அனுமதிக்கட்டும் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.