2014-06-06 15:41:33

காவல்துறையினர் உண்மைக்குப் பணி செய்து ஊழலுக்கு எதிராய்ச் செயல்பட வேண்டுகோள்


ஜூன்,06,2014. இத்தாலிய இராணுவ காவல்துறையின் உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் என ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேருக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இவ்வெள்ளி காலை திருப்பலி நிகழ்த்திய பேராயர் Santo Marciano அவர்கள், காவல்துறையினர் உண்மைக்குப் பணி செய்து ஊழலுக்கு எதிராய்ச் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.
இத்தாலிய இராணுவத்தினரின் ஆன்மீக வழிகாட்டியான பேராயர் Marciano அவர்கள் ஆற்றிய மறையுரையில், தொடர்புறவுக் கோட்பாடும், அறிவு சார்ந்த கோட்பாடும் நிறைந்த இவ்வுலகில் உண்மைக்குப் பணி செய்வது ஒரு சவாலாக உள்ளது என்றும் கூறினார்.
200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இராணுவ அமைப்பு உருவாக்கப்பட்டபோது, உண்மைக்குப் பணி செய்யவும், ஊழலை எதிர்க்கவுமான நோக்கத்தைக் கொண்டிருந்ததையும் பேராயர் Marciano அவர்கள் நினைவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி









All the contents on this site are copyrighted ©.