2014-06-05 16:53:05

கத்தோலிக்கர் பொறுப்புடன் வாக்களிக்குமாறு இந்தோனேசிய ஆயர்கள் வேண்டுகோள்


ஜூன்05,2014. இந்தோனேசியாவில் புதிய அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்குத் தயாரிப்புக்கள் இடம்பெற்றுவரும்வேளை, கத்தோலிக்கர் தங்கள் ஓட்டுரிமையைப் பயன்படுத்தி வாக்குச்சாவடிகளுக்குத் தவறாமல் செல்லுமாறு கேட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
வருகிற ஜூலை 9ம் தேதி நடக்கவுள்ள அரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள இந்தோனேசிய ஆயர்கள், 1945ம் ஆண்டின் அரசியல் அமைப்பு, ஜனநாயகம், நாட்டின் பஞ்சசீலக் கொள்கைகள் ஆகியவற்றை நினைவில் இருத்தி, வாக்காளர்கள் தேர்தலில் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
உலகில் அதிகமான முஸ்லிம்களைக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் 86 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். 3 விழுக்காட்டுக்குச் சற்று அதிகமாக கத்தோலிக்கர் உள்ளனர். 1.8 விழுக்காட்டினர் இந்துக்கள்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.