2014-06-04 14:59:44

காமரூனில் அருள்பணியாளர்கள் விடுவிக்கப்பட்டது இறைவன் வழங்கிய ஒரு கொடை, கர்தினால் ஃபிலோனி


ஜூன் 04,2014. காமரூன் நாட்டில் கடத்தப்பட்ட இரு அருள்பணியாளர்களும் அருள்சகோதரி ஒருவரும் விடுவிக்கப்பட்டது தலத்திருஅவைக்கு இறைவன் வழங்கிய ஒரு கொடை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
காமரூன் நாட்டில் கடத்தப்பட்டிருந்த இரு இத்தாலிய அருள்பணியாளர்களும், கானடா நாட்டைச் சேர்ந்த ஓர் அருள்சகோதரியும் கடந்த ஞாயிறன்று விடுவிக்கப்பட்டனர்.
காமரூன் நாட்டில் கடந்த வாரம் மேய்ப்புப்பணிப் பயணம் மேற்கொண்டிருந்த திருப்பீட நற்செய்தி அறிவிப்புப்பணிப் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி அவர்கள், விடுவிக்கப்பட்ட இம்மூவரையும் சந்தித்தபோது தான் இறைவனுக்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 4ம் தேதி கடத்தப்பட்ட, ஃபிதெய் தோனும் துறவு சபையைச் சேர்ந்த இரு அருள்பணியாளர்கள் ஜூன் 3, இச்செவ்வாய் இரவு உரோம் நகர் வந்தடைந்தனர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.