2014-06-03 17:31:07

திருத்தந்தையின் திங்கள், செவ்வாய் Twitter செய்திகள்


ஜூன்,03,2014. "அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி: நன்மை, அழகு, உண்மை ஆகிய உயரிய விழுமியங்களுக்கு இளையோரை அழைத்துச் செல்லும் கல்விப்பணி மிக முக்கியமானது" என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று வெளியிட்டார்.
மேலும், "சில வேளைகளில் நாங்கள் எங்களுக்குள் புதைந்துபோகிறோம். அவ்வேளைகளில், எங்கள் இதயங்களை மற்றவர் நோக்கித் திறந்து, வலுவற்றோருக்கு பணிபுரிய எங்களைத் தூண்டிவிடும் இறைவா" என்ற செபத்தை தன் திங்கள் Twitter செய்தியாக திருத்தந்தை வெளியிட்டார்.
அரேபியம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியம், இலத்தீன், இஸ்பானியம், போர்த்துக்கல், போலந்து என்ற ஒன்பது மொழிகளில் திருத்தந்தை, Twitter செய்தியை வெளியிட்டு வருகிறார்.
திருத்தந்தையின் Twitter செய்திகள் இஸ்பானிய மொழியில் மிக அதிகம் பேரால் பின்பற்றப்படுகின்றன என்றும், அதற்கு அடுத்தபடியாக ஆங்கிலத்தில் அதிகம் பேர் இச்செய்திகளைப் பின்பற்றுகின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.