2014-06-03 17:32:41

இளையோர் அமைப்புக்களிலிருந்து 1000 பிரதிநிதிகள் ஐ.நா. தலைமையகத்தில் சந்திப்பு


ஜூன்,03,2014. உலகின் பல நாடுகளில் செயலாற்றும் இளையோர் அமைப்புக்களிலிருந்து 1000 பிரதிநிதிகள், ஜூன், 2, இத்திங்களன்று ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், இவ்வுலகின் தேவைகள் ஆயிரம், அதேபோல், உலகில் ஏற்பட்டுள்ள வாய்ப்புக்களும் ஆயிரம் என்று கூறினார்.
மில்லென்னிய இலக்குகளை அடையும் இறுதி ஆண்டு 2015 என்று குறிக்கப்பட்டிருப்பதால், இந்த இலக்குகளை அடைவதில் இளையோரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ஐ.நா. தலைமையகம் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
180 கோடிக்கும் அதிகமாக உலகெங்கும் பரவியுள்ள இளையோரிடையே, தரமான கல்வி, அடிப்படை நலவாழ்வு வசதிகள், குறைந்த அளவு மதிப்பு தரும் தொழில்கள் ஆகியவை முக்கியத் தேவைகள் என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.