2014-06-03 17:32:17

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடத்தப்பட்ட இயேசுசபை அருட்பணியாளர் அலெக்ஸிஸ் பிரேம்குமார்


புலம் பெயர்ந்தோருக்கெனப் பணியாற்றும் இயேசுசபை பணியின் ஒருங்கிணைப்பாளராக ஆப்கானிஸ்தான் நாட்டில் பணியாற்றிய இயேசுசபை அருட்பணியாளர் அலெக்ஸிஸ் பிரேம்குமார் அவர்கள், இத்திங்கள் காலையில் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டார்.
தமிழக இயேசு சபையைச் சார்ந்த, 47 வயதான அருட்பணியாளர் பிரேம்குமார் அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வருகிறார். குறிப்பாக அங்குள்ள சிறுவர், சிறுமியருக்கு கல்விப் பணியாற்றுவதில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். திங்கள் காலை Zinda Jan எனப்படும் பகுதியில் உள்ள பள்ளிக்கு அவர் சென்றுகொண்டிருந்த வேளையில், அடையாளம் தெரியாத சிலர் அவரை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
அருட்பணியாளர் பிரேம்குமார் அவர்களை விடுவிக்கும் முயற்சியில் இந்திய இயேசு சபையினரும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் ஈடுபட்டுள்ளன.

ஆதாரம் : AsiaNews









All the contents on this site are copyrighted ©.