2014-06-02 20:01:06

இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழாவையொட்டி திருத்தந்தை வழங்கிய நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை


ஜூன்,02,2014. இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழாவையொட்டி நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் விண்ணேற்றம், அவர் நம்மிடமிருந்து பிரிந்து செல்லும் நிகழ்வு அல்ல, மாறாக நம்முடன் பயணிக்கும் ஒரு நிகழ்வு என்பதை இவ்விழாவின் மையப் பொருளாகக் கூறினார்.
நம்முடன் பயணிக்கும் இயேசு நம்மை சமுதாயத்தின் விளிம்பில் இருப்பவர்களிடம் அழைத்துசெல்கிறார் என்று கூறிய திருத்தந்தை, கிறிஸ்தவ சமுதாயம் தன்னிலிருந்து வெளியேறிச்செல்லும் ஒரு சமுதாயம் என்பதை விண்ணேற்ற விழா நமக்கு நினைவுறுத்துகிறது என்று கூறினார்.
இயேசு மட்டும் நம்முடன் பயணிப்பது கிடையாது, அன்னை மரியாவும் நம் உலகப்பயணத்தில் நம்முடன் வருகிறார் என்பதை நினைவுறுத்திய திருத்தந்தை, அனைவரோடும் சேர்ந்து அல்லேலூயா வாழ்த்தொலி செபத்தை கூறிய பின், கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.