திருத்தந்தை பிரான்சிஸ் - ஆயரின் பணியில் முக்கிய இடம் பெறுபவர்கள் வலுவற்ற,
வறியோர்
மே,31,2014. ஆயர் பணி என்பது, அதிகாரத்தையும், பெருமையையும் குறிக்கும் பணி அல்ல; மாறாக,
அது பணிவுடன் மேற்கொள்ளப்படவேண்டிய பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். இவ்வெள்ளி
மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், அருள் பணியாளர்
Fabio Fabene அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆயராகத் திருநிலைப்படுத்தியத்
திருப்பலியில் இவ்விதம் மறையுரையாற்றினார். ஆயர்கள் திருநிலைப்பாடுத் திருப்பலியில்
பயன்படுத்தப்படும் பாரம்பரியமான மறையுரையை அடித்தளமாகக் கொண்டு திருத்தந்தை வழங்கிய மறையுரையில்,
"உங்களில் பெரியவர், உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்" என்று இயேசு தன் சீடர்களுக்குக்
கூறிய அறிவுரையை வலியுறுத்திப் பேசினார். ஆயர்களின் கண்காணிப்பில், ஏனைய அருள் பணியாளர்கள்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, ஆயரின் பணியில் முக்கிய
இடம் பெறுபவர்கள் மக்கள், குறிப்பாக, வலுவற்ற, வறியோர் என்பதையும் ஆயர்கள் மறக்கக்கூடாது
என்று எடுத்துரைத்தார்.