எவ்வகையான அருள் பணியாளர்களை ஆப்ரிக்கா விழைகிறது? - கர்தினால் Fernando
Filoni
மே,28,2014. எவ்வகையான அருள் பணியாளர்களாக இருக்க விழைகிறீர்கள்? எவ்வகையான அருள் பணியாளர்களை
Cameroon நாடும், ஆப்ரிக்காவும் விழைகின்றன? என்ற இரு கேள்விகளை, வத்திக்கான் உயர் அதிகாரி
ஒருவர் எழுப்பினார். நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால்
Fernando Filoni அவர்கள், இத்திங்கள் முதல் ஆப்ரிக்காவின் சில நாடுகளில் தன் மேய்ப்புப்பணி
பயணத்தைத் துவக்கியுள்ளார். ஒருவாரம் நீடிக்கும் இப்பயணத்தின் துவக்கத்தில், Cameroon
நாட்டில் உள்ள அருள் பணியாளர் பயிற்சி மையத்தில், ஆப்ரிக்காவின் பல நாடுகளிலிருந்து வந்து
பயிலும் மாணவர்களுக்கு உரை வழங்கிய கர்தினால் Filoni அவர்கள், எத்தகைய அருள் பணியாளர்களை
ஆப்ரிக்கா எதிர்பார்க்கிறது என்ற முக்கியமான கேள்வி, அவர்கள் வாழ்வை வழிநடத்தவேண்டும்
என்று கேட்டுக்கொண்டார். இயேசுவுடன் கொள்ளும் ஆழமான நட்புறவே, அருள் பணியாளர் வாழ்வுக்கும்,
அர்ப்பண வாழ்வுக்கும் அடித்தளம் என்பதை, கர்தினால் Filoni அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார். Cameroon
நாட்டைத் தொடர்ந்து, Bamenda, Mongomo ஆகிய இடங்களிலும், கர்தினால் Filoni அவர்கள், தன்
மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொள்கிறார்.