திருத்தந்தையின் புனித பூமி பயணம் 2ம் நாள் – பாலஸ்தீனம் : அல்லேலூயா வாழ்த்துரை
மே,25,2014. அன்புச் சகோதர, சகோதரிகளே, நமது கொண்டாட்டத்தை முடிப்பதற்கு முன், நம்
எண்ணங்களை மீண்டும் ஒருமுறை அன்னை மரியாவை நோக்கித் திருப்புவோம். குழந்தை இயேசு முகத்தின்
வழியாக, இறைவனை ஆழ்நிலையில் தியானித்தவர் அன்னை மரியா. இந்த நாடும், இங்கு வாழும்
அனைவரும், நீதியிலும், அமைதியிலும் வாழும்படி, மரியாவிடம் நம்மை ஒப்படைக்கிறோம். பல்வேறு
நாடுகளிலிருந்து வந்திருக்கும் திருப்பயணிகளையும் ஒப்படைக்கிறோம். அன்னைமரியாவே, எங்கள்
குடும்பங்களைக் கண்காணிப்பீர். நம்பிக்கை இழந்திருக்கும் அனைவரையும் கண்காணிப்பீர். நோயுற்றோருக்கு,
சிறைப்பட்டோருக்கு, துன்புறுவோருக்கு ஆறுதல் வழங்கும். திருஅவையின் மேய்ப்பர்களை,
அனைத்து விசுவாசிகளைக் கண்காணித்தருளும். பாலஸ்தீன நாட்டின் அனைத்து கல்வி முயற்சிகளையும்,
குறிப்பாக, பெத்லகேம் பல்கலைக் கழகத்தையும் பாராமரித்தருளும்.