ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கும் செயல்பாடுகள் இல்லாதது
வருத்தத்தைத் தருகிறது - பேராயர் Gänswein
மே,21,2014. மத சார்பற்ற நிலையை ஒரு போர்கால நடவடிக்கைபோல ஏற்று செயல்படுத்தும் ஐரோப்பிய
நாடுகளில், கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கும் செயல்பாடுகள் இல்லாதது வருத்தத்தைத் தருகிறது
என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். திருத்தந்தையின் இல்லப் பொறுப்பாளராகவும்,
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தனிப்பட்ட செயலராகவும் பணியாற்றும் பேராயர்
Georg Gänswein அவர்கள், அண்மையில் சுவிட்சர்லாந்துக்கு மேற்கொண்ட பயணத்தின்போது இவ்வாறு
கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில், யூதர்கள், இஸ்லாமியர் ஆகியோருக்கு
எதிராக பேசுவதையும், செயல்படுவதையும் வன்மையாகக் கண்டிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், கிறிஸ்தவர்கள்
பாகுபாடுடன் நடத்தப்படும்போது பேசாமல் இருப்பது வருத்தத்தைத் தருகிறது என்று பேராயர்
Gänswein அவர்கள் கூறினார். இதற்கிடையே, மே 22, இவ்வியாழன் முதல், 24, இச்சனிக்கிழமை
முடிய ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், இத்தேர்தலில் மக்கள் அனைவரும்
ஆர்வமாகக் கலந்துகொண்டு, தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்ற அழைப்பை மனித
உரிமை அமைப்புக்கள் விடுத்துள்ளன.