2014-05-19 16:17:35

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி


மே 19, 2014. “இறைவார்த்தைக்குக் கவனமுடன் செவிமடுத்து, உண்மையிலேயே செபத்தில் ஈடுபடும் மனிதர்கள் எப்போதும் இறைவனிடம் கேட்பது ‘எனக்கென நீர் வகுத்துள்ள விருப்பம், திட்டம் என்ன?’ என்பதேயாகும்”, என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இதே நாளில் போலந்து பிரதமர் Donald Tusk மற்றும் அவருடன் வந்த குழுவையும் திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.