இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள்
மே 19, 2014. இலங்கையில் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கையில்
அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவிக்கிறது. பள்ளி ஆசிரியர்களால்
மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், துன்புறுத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்,
இது ஏற்றுக்கொள்ளக் கூடிய வரம்பையும் தாண்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புகார்கள்
தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவிக்கிறது.