2014-05-16 15:52:32

நியூ சிலாந்து தலைமை ஆளுநர் திருத்தந்தையுடன் சந்திப்பு


மே,16,2014. நியூ சிலாந்து தலைமை ஆளுநர் (Governor General) Sir Jerry Mateparae அவர்கள், இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
நியூ சிலாந்து நாட்டின் வளர்ச்சியில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றியுள்ள பங்கைக் குறித்தும், இன்னும் அந்நாட்டின் சமுதாய, பொருளாதார, அரசியல் நிலைமை குறித்தும் இக்கூட்டத்தில் பேசப்பட்டது என்று வத்திக்கான் செய்தித் தொடர்பகம் கூறியது.
நியூ சிலாந்து தலைமை ஆளுநர் Sir Jerry Mateparae அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்களையும், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுத் துறையின் தலைவர், பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.