2014-05-16 15:49:06

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதுவரை, 329 Twitter செய்திகள் வழங்கியுள்ளார்


மே,16,2014. இயேசுவை நம் வாழ்வின் எடுத்துக்காட்டாகக் கொண்டு, அவர் எண்ணங்களின்படி மென்மேலும் வாழ்வதே கிறிஸ்தவர்களின் முக்கியப் பணி என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று வெளியிட்டார்.
மேலும், இவ்வியாழனன்று அவர் வழங்கிய Twitter செய்தியில், இயேசுவின் மனதிற்கேற்றவாரும், அவர் கூறிய நற்செய்தியின் வழியிலும் தினமும் வாழ்வதற்கு, தூய ஆவியாரின் வரங்களை வேண்டுவோம் என்ற கருத்தைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.
ஒவ்வொரு நாளும், இத்தாலியம், இலத்தீன், இஸ்பானியம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், போர்த்துகீசியம், போலந்து, அரேபியம் ஆகிய 9 மொழிகளில் திருத்தந்தை வெளியிட்டு வரும் Twitter செய்திகள், உலகெங்கும் 130 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை ஒவ்வொரு நாளும் சென்றடைகிறது.
@pontifex என்ற முகவரியுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதுவரை, 329 Twitter செய்திகள் வழங்கியுள்ளார் என்றும், இன்றைய நிலவரப்படி, அவரது செய்திகளை ஒவ்வொரு நாளும் தொடர்வோரின் எண்ணிக்கை, 1 கோடியே, 30 இலட்சத்திற்கும் அதிகம் என்றும் வத்திக்கான் இணையத்தளம் கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.