2014-05-13 18:08:01

மத்திய ஆப்ரிக்கக் குடியரசு திறந்தவெளி சிறைச்சாலையைப் போல் உள்ளது - ஆயர்கள்
கவலை


மே,13,2014. மத்திய ஆப்ரிக்கக் குடியரசு இன்று வன்முறையாளர்களின் கைகளில் சிக்குண்டு, திறந்தவெளி சிறைச்சாலையைப் போல் இருப்பதாக, தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசு முழுவதும் பேச்சுரிமை, நடமாடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டு, அந்நாடு, ஒரு சிறைச்சாலை போல மாறிவிட்டதென கூறிய ஆயர்கள், ஆயுதம் தாங்கிய கும்பல்கள் ஆட்சியைக் கைப்பற்றப் போராடிவருவதால், வன்முறைகள் பெருகியுள்ளன என்றும் தெரிவித்தனர்.
சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் குழுக்களிலிருந்து ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, தேசிய காவல்படை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்ற அழைப்பையும் ஆயர்கள் முன்வைத்துள்ளனர்.
வன்முறைகளின் துணையுடன், நாட்டின் வளங்கள் சட்ட விரோதமாகச் சுரண்டப்படுவது குறித்தும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் ஆயர்கள்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.