2014-05-10 16:09:52

மற்றவர்களின் தேவைகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள் ஆகியவைகளுக்கு செவிமடுத்து நம்பிக்கையை விதைப்பவர்களாக செயல்படுங்கள்


மே 10,2014. இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்வதில், தந்தையாம் இறைவனின் மீட்பளிக்கும் அன்பின் துணை கொண்டு வெற்றிபெறவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துறவு அமைப்பு முறைச்சாரா இயக்கங்களின் அங்கத்தினர்களை இச்சனிக்கிழமை காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்ல சமாரியர் உவமையை எடுத்துரைத்து, நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் சகோதர சகோதரிகளாக நோக்கி, அன்புடனும் கருணையுடனும் அணுகவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இன்றைய நவீன உலகு தரும் சுகங்களில் நாம் நம்மை இழந்துவிடாமல் இருக்க நமக்கு மனமாற்றம் தேவைப்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மற்றவர்களின் தேவைகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள் ஆகியவைகளுக்கு செவிமடுத்து நம்பிக்கையை விதைப்பவர்களாக செயல்படுங்கள் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் மற்றும் முதியோரிடையேயான துறவு அமைப்புமுறைச் சாரா இயக்கங்களின் பணி குறித்தும் எடுத்தியம்பினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.