திருத்தந்தையின் இலங்கை திருப்பயண வாய்ப்புகள் குறித்து மன்னார் ஆயர்
மே 10,2014. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இலங்கை நாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
திருப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்
அவர்கள் தெரிவித்தார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் ‘அட் லிமினா’ சந்திப்பையொட்டி
உரோம் நகர் வந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபின் ஆசிய செய்தி நிறுவனத்திற்குப்
பேட்டியளித்த மன்னார் ஆயர் ஜோசப் அவர்கள், இலங்கையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
திருப்பயணம் மேற்கொள்ளும்போது, மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள மடுமாதா திருத்தலத்திற்கும்
அவர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றார். போரின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட
மக்களைக் குறித்து திருத்தந்தை மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளதைக் காண முடிகிறது எனவும்
கூறினார் ஆயர் ஜோசப்.