2014-05-07 16:12:06

கடத்தப்பட்ட நைஜீரிய சிறுமிகள் உடனே விடுவிக்கப்பட அந்நாட்டு கர்தினால் அழைப்பு


மே 07,2014. நைஜீரியாவில் தீவிரவாதக் குழுக்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள 276 சிறுமிகளும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் அந்நாட்டு கர்தினால் John Onaiyekan.
பள்ளிச் சிறார்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறும் அரசின் இயலாமை குறித்து தான் வெட்கப்படுவதாக உரைத்த கர்தினால், Boko Haram தீவிரக்குழுவின் அச்சுறுத்தலால் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டார்.
மனிதாபிமானம் என்ற உணர்வே இல்லாத இந்த அமைப்பு, 276 சிறுமிகளை எதற்காகக் கடத்தி வைத்திருக்கிறார்கள் என்ற செய்தியும் வெளியிடப்படவில்லை என மேலும் கூறினார் கர்தினால் Onaiyekan.

ஆதாரம் : CWN








All the contents on this site are copyrighted ©.