மே 06,2016. ராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக, இறைவார்த்தை துறவுசபையின் கிழக்கிந்திய
மாநிலத் தலைவர் அருட்பணி Telsphore Bilungஐ இச்செவ்வாய்க்கிழமையன்று நியமித்துள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். ஒரிசாவின் Rourkela மறைமாவட்டத்தில் 1961ம் ஆண்டு பிறந்த
புதிய துணை ஆயர், இறைவார்த்தை துறவுசபையில் 1985ம் ஆண்டு இணைந்து, பூனாவில் தன் உயர்கல்வியை
முடித்தபின் 1992ம் ஆண்டு அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். பங்குதளங்களில்
பணியாற்றியதுடன், இறைவார்த்தை துறவுசபையின் இளங்குருமட அதிபராகவும் பணியாற்றியுள்ள புதிய
துணை ஆயர் Bilung, பிரிட்டனிலும் மேற்படிப்பை முடித்து 2011ம் ஆண்டுமுதல் அச்சபையின்
மாநில அதிபராகப் பணியாற்றிவருகிறார். ராஞ்சி உயர் மறைமாவட்டத்தில் கர்தினால் Telesphore
Toppoவுக்கு துணைஆயராக இறைவார்த்தை சபை அருட்பணி Bilung பணியாற்றுவார்.