2014-05-05 16:51:03

போலந்து மக்களுடன் திருத்தந்தையின் நன்றி திருப்பலி


மே 05,2014. முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டதற்கான நன்றித் திருப்பலியை உரோம் நகரின் போலந்துமொழி பேசுபவர்களுக்கான புனித ஸ்தனிஸ்லாஸ் கோவிலில் இஞ்ஞாயிறு காலை நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மகிமை அடைய வேண்டுமெனில், பாடுகள் மற்றும் சிலுவை வழியேதான் செல்லவேண்டும் என, தங்கள் வரலாற்றில் இடம்பெற்ற சோதனைகளைக் கடந்து வந்துள்ள போலந்து மக்கள் அனுபவபூர்வமாக அறிவார்கள் என்ற திருத்தந்தை பிரான்சிஸ், புனித இரண்டாம் ஜான் பாலின் எடுத்துக்காட்டான வாழ்வு குறித்தும் போலந்து மக்களிடம் எடுத்துரைத்தார்.
நாம் ஒவ்வொருவரும் இலக்கின்றித் திரியும் மக்கள் அல்ல, மாறாக, எங்கு செல்லவேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்தவர்களாக நடைபோடும் திருப்பயணிகள் என போலந்து மக்களுக்கான திருப்பலி மறையுரையில் மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.