2014-05-03 18:19:24

திருத்தந்தையின் டுவிட்டர். சிறார் பாதுகாப்பிற்கான திருப்பீட சிறப்பு அவையின் கூட்டம்


மே 03,2014. 'அஞ்சாதீர்கள். உங்கள் கதவுகளை இயேசுவுக்குத் திறந்துவிடுங்கள்' என தன் இச்சனிக்கிழமை டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், சிறார் பாதுகாப்பிற்கென திருத்தந்தையால் உருவாக்கப்பட்ட திருப்பீட அவை இச்சனிக்கிழமையன்று தன் மூன்று நாள் துவக்கக் கூட்டத்தை நிறைவுச் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு பாஸ்டன் கர்தினால் Sean Patrick O’ Malleyயுடன் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை உள்ளடக்கிய இவ்வவை, சிறார்கள் பாலியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படும் நிலைகளிலிருந்து பாதுகாக்கப்படுதல், முன்காலத்தில் இந்நிலைகளுக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு மீட்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தல் போன்றவைகளை உள்ளடக்கிய பரிந்துரைகளை திருத்தந்தைக்கு சமர்ப்பிப்பதே தங்கள் பணி நோக்கம் என தெரிவித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.