மே 01,2014. 'அரசியல் பொறுப்பில் இருப்போர் இரு விடயங்களை மனதில் கொள்ளவேண்டும் என ஒவ்வொருவரையும்
கேட்டுக்கொள்கிறேன். அவையாவன : மனித மாண்பும், பொது நலனும்' என தன் டுவிட்டர் பக்கத்தில்
இவ்வியாழனன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வியாழன், மே மாதம் முதல்
தேதி, உலக தொழிலாளர் தினம் உலகெங்கும் சிறப்பிக்கப்படும் இவ்வேளையில், மனித மாண்பிற்கும்
பொது நலனுக்கும் அரசியல் வலிமையுடையோர் முதலிடம் கொடுக்கவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் விண்ணப்பித்துள்ளது முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாக உள்ளது.