2014-05-01 16:25:38

அமெரிக்காவில் சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்டவர்களை காப்பதில் கத்தோலிக்க அமைப்புகள்


மே 01,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென்பகுதியில் கடந்த ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் ஏற்பட்ட சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன கத்தோலிக்கத் துயர்துடைப்பு நிறுவனங்கள்.
Arkansas, Mississipi ஆகிய இடங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், Oklahoma, Iowa, Alabama, Tennessee ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்டு 35 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மறைமாவட்டங்கள் வழி, இழப்புகளை கணக்கிடுவதுடன், அவசர உதவிகளையும் வழங்கி வருகின்றன.
உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டாலும், மக்களுக்கு தங்குமிடங்களை அமைத்துக் கொடுப்பது போன்ற பணிகளில் அதிகக் கவனம் செலுத்தி வருவதாக கத்தோலிக்க உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.