திருப்பீடத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே 40 ஆண்டு அரசியல் உறவு
ஏப்.30,2014. திருப்பீடத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே அரசியல் உறவு உருவாக்கப்பட்டதன்
40ம் ஆண்டு நிறைவுறும் இவ்வேளையில், அந்நாடில் கத்தோலிக்க திருஅவை ஆற்றிவரும் நலஅதரவு,
கல்வி மற்றும் பிறரன்பு நடவடிக்கைகளை நன்றியுடன் நினைவுகூர்வதாக தெரிவித்தார் திருப்பீடச்செயலர்
கர்தினால் Pietro Parolin. மனித உரிமைகள் மதிக்கப்படுவது மேம்படுத்தப்படுவதில் கத்தோலிக்கர்கள்
ஆற்றவேண்டிய முக்கியக் கடமையை வலியுறுத்திய கர்தினால் பரோலின், சமுதாய முன்னேற்றத்தில்
கத்தோலிக்கர்கள் ஆற்றவேண்டிய கடமை நிறையவே உள்ளது என்றார். சகோதரத்துவ அன்பிற்கு சாட்சிகளாக
விளங்கவேண்டிய கத்தோலிக்கர்களின் கடமையை எடுத்துரைத்த திருப்பீடச் செயலர், திருப்பீடத்திற்கும்
ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான அரசியல் ஒப்பந்தம் இத்தகைய செயல்பாடுகளுக்கு ஊக்கம் தந்துள்ளது
என்பதையும் சுட்டிக்காட்டினார்.