2014-04-26 16:44:03

அர்ஜென்டினாவின் சேரிப்பகுதியில் பணியாற்றும் அருள் பணியாளருக்கு திருத்தந்தையின் எதிர்பாராத தொலைபேசி அழைப்பு


ஏப்.26,2014. அர்ஜென்டினா நாட்டின் ரொசாரியோ என்ற சேரிப்பகுதியில் வாழும் மக்களிடையேப் பணியாற்றும் அருள் பணியாளர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள் பணியாளர் ஆற்றிவரும் பணிகளுக்கு தன் ஊக்கத்தை வழங்கியுள்ளார்.
எதிர்பாராத வகையில் திருத்தந்தையிடமிருந்து தனக்கு வந்த தொலைபேசி அழைப்பினால் தான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததாக உரைத்த அருள் பணியாளர் Joachin Nunes அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னுடன் நெடுநேரம் உரையாடியதாகவும் கூறினார்.
அர்ஜென்டினாவின் இராணுவ ஆட்சியின்போது சிறையிலடைக்கப்பட்டு, சித்திரவதைகளை அனுபவித்துள்ள அருள் பணியாளர் Nunez அவர்கள் பேசுகையில், அர்ஜென்டினாவின் சேரிவாழ் மக்களின் நிலைகள் குறித்து திருத்தந்தை அதிகம் அறிந்துள்ளதாகவும், வன்முறை மற்றும் போதைப்பொருள் கடத்தலின் விளைவுகளால் இம்மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

ஆதாரம் : Catholic Online








All the contents on this site are copyrighted ©.