திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்ட டுவிட்டர் செய்தி - நம்பிக்கை, மலைகளையும் பெயர்க்கும்
ஏப்.25,2014. 'எதிர்மறை எண்ணங்கள் நிறைந்த இருளான பாதாளத்தில் விழுவதற்கு நம்மை நாமே
அனுமதிக்கக்கூடாது. நம்பிக்கை, மலைகளையும் பெயர்க்கும்’ என்ற டுவிட்டர் செய்தியை, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று வெளியிட்டார். மேலும், புனிதர்களாக அறிவிக்கப்படவிருக்கும்
இரு திருத்தந்தையரைச் சிறப்பிக்கும் வகையில், திருப்பீடப் பொதுநிலையினர் அவை, இணையதளத்தில்
ஒரு சிறப்புப் பகுதியை இவ்வெள்ளியன்று துவக்கியுள்ளது. திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களும்,
2ம் ஜான்பால் அவர்களும் பெண்களுக்கு வழங்கிய மதிப்பைக் குறித்து இச்சிறப்புப் பகுதியில்
பல பெண்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதேபோல், இவ்விரு திருத்தந்தையரும்
பெண்களை மையப்படுத்தி வெளியிட்ட பல கருத்துக்களும் இப்பகுதியில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.